பக்கம் எண் :

552திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.     6

3037. வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
  பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.          7


முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும்,
இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து
துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: தும்மும்போதும் இருமும்போதும் உடலில் நீங்குவது
உள்ளமையால் அப்பொழுதும், கொடிய நரகத்துன்பம் நுகரவந்தவிடத்தும்,
முற்பிறப்பிற் செய்தவினை இம்மைக்கண் அடர்த்துச் சேரும்பொழுதும்,
உச்சரிக்கத் துணையாவதும் இம்மையில் ஓயாது ஓதி வந்ததின் பயனாக
மறுபிறவியில் வந்து துணையாவதும் திருவைந்தெழுத்தே.

     7. பொ-ரை: இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திருமந்திரத்தைப்
பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும்
செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான்
மகிழ்வன திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: வீடு - இங்குச் சாதல் என்னும் பொருளில் வந்துள்ளது. பிறப்பு
- பிறத்தல். சாதலும் பிறத்தலும் தவிர்த்து. மெச்சினர் - தன்னைப் பாராட்டிப்
பயில்பவர். பீடை - பிறவியில் வரக்கடவ துன்பங்கள். அவை:- பிற
உயிர்களால் வருவன, தெய்வத்தால் வருவன, தன்னால் வருவன என
மூவகைப்படும். மாடு - செல்வம். கொடுப்பன. திருவைந்தெழுத்து செல்வமும்
தரும் என்பதைச் “சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால், நந்திநாமம்
நமச்சிவாயவே” என்பதற்கண் காண்க. மன்னும் - நிலைபெற்ற, மா நாடகம்
- பெரிய கூத்தை, ஆடி மகிழ்வனவும் திருவைந்தெழுத்துக்களாம்.
அஞ்செழுத்தே நடம் ஆடி உகப்பன என்றது “சிவாயநம வென்னும்
திருவெழுத்தைந்தாலே அபாய மற நின்றாடுவான்.” என்ற உண்மை விளக்கச்
செய்யுட்கருத்து.