பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)35. திருத் தென்குடித்திட்டை637

3180. தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
  கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.    11

திருச்சிற்றம்பலம்


     பொழில் தண்தலை கொண்டல் ஆர் - சோலைகளின் குளிர்ந்த
உச்சியில் மேகங்கள் படியும்.

     11. பொ-ரை: தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த
திருத்தென்குடித்திட்டையைப் போற்றி, கடற்கரையின்கண் அமைந்துள்ள
நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த, சிவஞானம் நிறைந்த
ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப்
பாவம் இல்லை.

     கு-ரை: கானல் ஆர் - கடற்கரையின் கண்ணே பொருந்திய. கடி
பொழில் - வாசனையையுடைய பொழில் சூழ்ந்த காழி. பால்நல் ஆர் மொழி
- பால்போலும் நன்மை பயக்கும் மொழியாலாகிய. மாலை வல்லார்க்குப்
பாவம் இல்லையாம்.

மதுரைச் சொக்கநாதர் உலா
மூவர் பெருமை

                    “வையை எதிர்
ஏடேற்றித் தென்னவனை ஈடேற்றி, வெஞ்சமணக்
காடேற்றம் ஏறக்கழுவேற்றி - நீடேற்றம்
தானேற்ற புத்தன் தலையில் இடியேற்றும்
கானேற்ற பாடல் கவுணியனும் - மேனாள்
நிலை கடந்த காற்றூணால் நீண்ட கடலாழி
அலைகடந்த நாவுக்கரசும் - மலரடைந்த
புள்ளாவாம் பொய்கையிடைப் புக்கமுதலை வாய்ப்
பிள்ளைவா என்ற பெருமாளும்”.

                      -புராணத் திருமலைநாதர்.