பக்கம் எண் :

704திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3297. கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர்
  நிலவு பாட லுடையான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.         11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: போர்த்த மெய்யினர் - சீவரவுடையால் மறைத்த உடம்பினர்.
போது உழல்வார்கள் - பொழுதெல்லாம் அவைபவர்கள். கார்த்தண் முல்லை
-கார்காலத்தில் மலரும் தண்ணிய முல்லைப்பூ. ஆத்தர் - ஆப்தர்.

     11. பொ-ரை: மயில், தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் புகழ்ப் பாக்கள் கொண்டு
போற்றி வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு
செலுத்தி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின்
தொல்வினை தீரும்.

     கு-ரை: கலவம் - கலாபம்; தோகை. நிலவு - விளங்குகின்ற; கழல்
குலவும் - திருவடிகளில் குலாவும். திருஞானசம்பந்தர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

வந்து பந்தர்மா தவிமணங் கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணம்ஆ ரழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.

                                 -சேக்கிழார்.