பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)47. திருஆலவாய்705

47.திருவாலவாய்

பதிக வரலாறு:

      எண் இல்லாத பாக்கியப் பயனாய் உள்ள பாலறாவாயர்,
பாவகாரிகளான அமணரை நோக்குந் தீங்கு உடனே நீங்கவும் அவரை
வெல்லவும் திருவருட் குறிப்பை அறிய அவாவினார். திருவாலவாயுள்
புகுந்தார். “தீயாரைக் காண்பதுவும் தீதே” என்னும் விலக்கிற்குமாறாக,
விதியிலாரை நோக்கி, யான் வாதுசெய்யத் ‘திருவுள்ளமே’ என்று பாடிய
வண்டமிழ் மாலை இத்திருப்பதிகம்.

பண்: கௌசிகம்

ப.தொ.எண்:305   பதிக எண்: 47

திருச்சிற்றம்பலம்

3298. காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
  நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.          1


     1. பொ-ரை: காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய
இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே! நல்வேள்வியைப்
புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை
விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை செய்வாயாக!

     கு-ரை: காட்டுமா - காட்டிலுள்ள யானை. உரி - உரிவை; தோல்.
உடல் போர்த்து - உடலிற் போர்த்து. நாட்டம் - கண், நாட்டம்
மூன்றுடையாய் என்றது; ஏனையர்போல இருகண் அன்றி, மேலும் ஒரு கண்
(நெற்றிக்கண்) தீயோரை அழித்தற்கெனக் கொண்டருளினாய். இது பொழுதும்
அச்செயல் செயவேண்டும் என்ற குறிப்பு. வன்றொண்டப் பெருந்தகையும்
வேறு திருவுளம்பற்றியருளற் குறிப்போடு “மூன்று கண்ணுடையாய் அடியேன்
கண் கொள்வதே” என்றமையும் காண்க. உரை செய்வன் - நான்
விண்ணப்பம் செய்து கொள்வேன். அது திருக்கடைக் காப்பில் கேட்ட
‘ஞானசம்பந்தன்’