3299. |
மத்த யானையின் ஈருரி மூடிய |
|
அத்த
னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே. 2 |
3300. |
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம் |
|
திண்ண
கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே. 3 |
என்றமையாலும் அறியப்படுகிறது.
ஓட்டி வாதுசெய - வாதுசெய்து ஓட்ட என
விகுதி மாற்றிக் கூட்டுக.
2.
பொ-ரை: மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப்
போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே! பொய்த்தவ
வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம்
யாதோ? உரைப்பாயாக.
கு-ரை:
மத்தம் - மயக்கம், மதங்கொண்டமையாலுண்டாவது. ஈர்
-உரிக்கப்பட்ட. திருவுள்ளமே, பணி சொல்லி அருள்வீராக. பொய்த்த வன்
தவவேடத்தர் - பொய்யாகிய வலிய தவவேடத்தையுடையவர். சித்தர் -
மேல் பாசுர உரையால் அறிக. நிற்பதுபோல் நிலையிலா நெஞ்சு என்பது
மூன்றாம் அடியிற் குறித்த பொருள். அதனை இனம் போன்று இனமல்லார்
கேண்மை எனவரும் திருக்குறளால் அறிக.
3.
பொ-ரை: இப் பூவிலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா
இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே!
பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம்
கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது!
உரைத்தருள்வாயாக.
கு-ரை:
எங்கும் ஆம் - எங்குமாய் நிறைந்து, திருவாலவாயினில்
வெளிப்பட்டருளிய பெருமானே என்பது முதலிரண்டடியின் கருத்து. அருள்
-சொல்லியருள்வீராக. எழில் இகழ்ச்சி குறிப்பு. திண்ணகத் திருவாலவாய்
-பகைவரால் அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய்.
தெண்ணர் - திண்ணர் என்பதன் மரூஉ. குண்டர் முதலிய பிற
பெயர்களைப்போல்வது இது, சாக்கியப்
|