பக்கம் எண் :

742திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3360. போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
  பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.       11

திருச்சிற்றம்பலம்


     1. பொ-ரை: நீர்வளம் தரும், ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற சீகாழியில்
அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன் இறைவனுடைய
நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல்மாலையை ஓதித் திரு
ஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவ பெருமானை வழிபடுபவர்கள் தீமைகள்
நீங்கப்பெற்று நற்சிந்தையுடைய தேவர்களாவர்.

     கு-ரை: போய் - வந்து பாய்ந்த. நீர், பாய - பரந்த. தீய(வை) -
தீவினைகள். இனிப்போதல் என்பதற்கு நேர்மை என்னும் பொருள்
உண்மையால் பருவகாலத்திற் பெய்த நீர் எனினும் பொருந்தும்.

திருஞானசம்பந்தர் புராணம்

கைகளுந் தலைமீ தேறக் கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே! அடிய னேனை அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே! என்று வீட லாலவாய் விளம்ப லுற்றார்.

                                 -சேக்கிழார்.