பக்கம் எண் :

748திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3368. பொன்னமல்கு தாமரைப் போதுதாது
       வண்டினம்
அன்னமல்கு தண்டுறை யானைக்காவி
     லண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல
     தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழ றுன்னவல்லர்
     விண்ணையே.                     8

3369. ஊனொடுண்ட னன்றென ஊனொடுண்டல்
       தீதென
ஆனதொண்ட ரன்பினாற் பேசநின்ற
     தன்மையான்


     கு-ரை: மாலை, நண்பகல் கூறவே ஏனைக்காலையும் அடங்கிற்று,
முப்பொழுதிலும் என்க. “முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள், பின்னையவனுடைய
ஆரூர்கேட்டாள்” என்ற அப்பர் வாக்கோடு இரண்டாமடி யொத்திருத்தல்
காண்க. கங்கை நீரோடு செஞ்சடை ஆர ஏந்தினான் என்க.

     8. பொ-ரை: இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம்
ரீங்காரம் செய்யவும், அன்னப்பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின்
துறைகளை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான
சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி, அவன்
திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவலகின்கண் குறைவற்ற
செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.

     கு-ரை: பொன்னம் - இலக்குமி. தனிமொழியும் சாரியை பெற்றது.
திருவடியை நினைக்கும் தன்மைவல்லர் ஆவார் விண்ணையும் அடைய
வல்லர் ஆவார். (விண் - முத்திப்பேறு) என்றது ஈற்றடியின் பொருள்.

     9. பொ-ரை: ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று
சுவைமிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்பநாயனாரின் அன்பிற்கும்,
ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது