|
வானொடொன்று
சூடினான் வாய்மையாக
மன்னிநின்று
ஆனொடஞ்சு மாடினா னானைக்காவு
சேர்மினே. 9 |
3370. |
கையிலுண்ணுங் கையருங் கடுக்கள்தின் |
|
கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை
யறிகிலார்
தையல்பாக மாயினான் றழலதுருவத்
தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு
சேர்மினே. 10 |
தீது என மருண்ட சிவகோசரியார்
அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும்,
பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து
நின்று, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்
படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா
என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள்.
கு-ரை:
முதலீரடி கண்ணப்பநாயனார் வழிபாட்டையும், சிவகோசரியர்
வழிபாட்டையும் குறிப்பன. வானொடு ஒன்று - வானில் பொருந்துதலையுடைய
(மதியை) சூடினான். ஒன்று - ஒன்றுதலையுடைய மதிக்கு ஆனது தொழிலாகு
பெயர். ஆனோடு அஞ்சு - மூன்றனுருபு ஆறன் பொருளில்வந்த வேற்றுமை
உருபு மயக்கம்.
10.
பொ-ரை: கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும்,
கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும், மெய்ப்பொருளாம் இறைவனை
உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய்
வேதநெறியை அறியாதவர்கள். எனவே அவர்களைச் சாராது, உமாதேவியைத்
தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், நெருப்புப் போன்ற
சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை
அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள்.
|