பக்கம் எண் :

788திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ்
     சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி
     யமர்ந்தவனே.                    6

3422. இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண்
       ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன
     லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்
     சாத்தமங்கை
அமையவே றோங்குசீரா னய வந்தி
     யமர்ந்தவனே.                    7


வேள்வியாகவும், ஞானவேள்வியாகவும் திகழ்பவன். ஒண்பொருளாகவும்,
வீடுபேறாகவும் உள்ளவன். சோதிவடிவானவன். உமாதேவியைத் தன்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன். இப்பெருமான்
இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ? அத்தகைய
சிறப்புடைய பெருமான், தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும்
திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: பொருள்வீடு - பொருளாகிய வீடு. சொல்லலாவதொன்றே -
புகழ்ந்து சொல்லக்கூடிய ஒருசெயலாகுமோ. ஆதியாய் - முதல்வனாகி.

     7. பொ-ரை: சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும்
நிலைகலங்குமாறு, முப்புரங்களை எரித்து, திருவெண்ணீற்றினைப் பூசி
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப்
பேசக் கூடிய அரிய செயலாகும். அவன் சமயநூல்களையும், வேதத்தையும்,
அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற
திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி
என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.