பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)58. திருச்சாத்தமங்கை789

3423. பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர்
       பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும்
     வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற்
     சாத்தமங்கை
அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி
     யமர்ந்தவனே.                       8

3424. பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும்
       பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுட னாவது
     மேற்பதொன்றே


     கு-ரை: இமயம் எல்லாம் - இமயம் முதலிய மலைகளெல்லாம்.
இரிய - (அதிர்ச்சியால்) நிலை பெயர, மதில் எய்து, உன்னலாவது. ஒன்றே
- பாராட்டி நினைக்கக் கூடியது ஒன்றா? சமயம் - சமய நூல்களையும்.
அமைய - இடமாகப் பொருந்த. வேறு ஓங்குசீரான் - பிறிதொன்றற்கு
இல்லாத மிக்கசிறப்புடன்.

     8. பொ-ரை: இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில்
மீட்டிப் பாடுவான். பரமயோகி அவன். மலையரசன் மகளாகிய பார்வதி
தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான்
குளிர்ச்சி பொருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த
சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி, திரு
அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: பயில்வான் - பயின்றவனாகிய. ஓர் பரம யோகி - ஓர்
மேலான யோகியே. மகள்பாகமும் வேண்டினை ஒரு நயம். அண்ணலாய் -
தலைவனாகி.

     9. பொ-ரை: மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால்
மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான்
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு
அம்மையப்பனாகவும், உடனாகக் கொண்டு அழகிய