|
காரெழில்
வண்ணனோடு கன கம்மனை
யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி
யமர்ந்தவனே. 9 |
3425. |
கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை |
|
யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல
லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு
சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி
யமர்ந்தவனே. 10 |
இரண்டு கோலமாகவும்,
கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான
திருமாலும், பொன்போன்ற நிறமுடைய பிரமனும், காண முடியாவண்ணம்
நெருப்பு வண்ணமுமாகி, திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில், திரு
அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
பெண்ணோர் பாகம் - ஒரு பாகத்திற் பெண்ணும் ஒரு
பாகத்தில் ஆணுமாகி. ஈரெழிற் கோலமாகி - அழகிய இரண்டு கோலமாகி.
உடன் ஆவது - ஓருருவமாவதும். கனகம் அனையான் - நிறத்தினால்
பொன்னொப்பான் ஆகிய பிரமன். ஆர் அழல் வண்ணம் ஆகி, அருமை +
அழல் அணுகற்கரிய தீயின் வண்ணம் - இங்கு வடிவின் மேல் நின்றது.
மங்கை - சாத்தமங்கை.
10.
பொ-ரை: சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி,
பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய
தொன்றா? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்ற அந்தணர்கள்
தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில்
பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
கங்காதேவி ஓர் வார்சடையின் பால், அடைய, புடை -
(உடம்பின்) ஒருபக்கல். மணம் புரிந்து கொண்ட உமாதேவியோடு
|