பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)58. திருச்சாத்தமங்கை791

3426. மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம்
       பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்க னெடு மாநக
     ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே
     லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு
     முந்துவரே.                       11

திருச்சிற்றம்பலம்


ஓருடம்பாகி நின்ற அறிவுடைமை - புகழ்ந்து சொல்லக் கூடிய தொன்றா?
கமழ்தல் - மணத்தல், அச்சொல்லால் அறியக்கூடிய மற்றொரு பொருள்
விவாகம் செய்து கோடலுக்கு ஆகியது. இலட்சித இலட்சனை.

     11. பொ-ரை: நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில்
அவதரித்த ஞானசம்பந்தன், மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி,
திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும்
திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும்
திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள்
தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர்.

     கு-ரை: நிறை - மனத்தைத் தன்வழியோடாது நிறுத்தல்.
இமையோரிலும் முந்துவர் - “யான் எனது என்னுஞ் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”. (குறள். 346)

     எட்டாம் திருப்பாடலில் வரும் இராவணன் செயல் ஒன்பதாம்
திருப்பாடலில் அயன் செயலோடு கூறப்பட்டுள்ளது. இரண்டாம்
திருப்பாடலிலும், திருக்கடைக்காப்பிலும் இத்தலத்தில் வாழ்ந்து வந்த
திருநீலநக்க நாயனாரைப்பற்றிக் கூறப்படுகிறது.