|
போதவிழ்
பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி
யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாட் டிருத்
தாடகை யீச்சரமே. 10 |
3470. |
தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை |
|
யீச்சரத்துக்
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன்
காழியர்கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம்
பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை
பற்றறுமே. 11 |
திருச்சிற்றம்பலம்
்மொழிகளை ஏற்றுக்
கொள்ளாதீர்கள். நின்மலனான சிவபெருமானது
உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள்
ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும்
திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும்
திருக்கோயிலாகும்.
கு-ரை:
ஆதர் - பயனிலிகள், ஐந்துகில் .... நீதர் - நீசர் - புத்தர்.
உரைக்கும் மொழி கொள்ளன்மின். நின்மலன் ஊராகிய திருப்பனந்தாளை.
அடைந்துய்ம்மின் என்பது அவாய்நிலை.
11.
பொ-ரை: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும்
திருத்தலத்தில், திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில்,
வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை
அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த தலைவனான
ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு
கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும்.
கு-ரை:
கண் அயலே - பிறையான் - மேல் நோக்கிய திருவிழி
நெற்றியில் உண்மையால் அதன்மேல் (தலையின் பாகத்தில்) பிறையை
யணிந்தவன், நல்ல - நற்பயனைத் தருதலாகிய, பண் இயல் பாடல் -
பண்ணொடு கூடிய பாடல்.
|