3602. |
துங்கமிகு பொங்கரவு தங்குசடை |
|
நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு
பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை
வல்லவர்கள் சங்கையிலரே. 11 |
திருச்சிற்றம்பலம்
மான உபதேச மொழிகளை
விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய
பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த
மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள
சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும்.
கு-ரை:
பொச்சம் அமர் - பொய் பொருந்திய. (துறவி
வேடங்கொண்டு) பிச்சையெடுக்கும். அச்சமணும் - அந்தச் சமணர்களும்.
எச்சம் அறு - புகழற்ற. போதியரும் - புத்தர்களும். ஆம் - ஆகிய.
மொச்சை - இழி தொழிலர். பயில் - சொல்லும். இச்சை - விருப்பமான
உபதேசமொழிகளை. கடி - விலக்கும். பிச்சன் - பித்தன் என்னும்
பெயருடையவனும். மிகு நச்சு அரவன் - மிகுந்த விடத்தைக்கக்கும் பாம்பை
அணிந்தவனுமாகிய சிவபெருமானது. மொச்ச - (மொய்த்த) அடியார்கள்
நெருங்கிய (நகர்தான்) மைசில் முகில் - கரிய சில மேகங்கள்.
வைச்சபொழில் - தங்கிய சோலைகள்... ... எச்சம் - புகழ் என்னும்
பொருளில் வருதலை எச்சமென்றென்னெண்ணும் கொல்லோ (குறள். 1004)
என்பதாலும் அறிக. பிச்சன்: - பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி. (தி.10
திருமந்திரம்).
11.
பொ-ரை: நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த
சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த
கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமா
தேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர்
வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை
மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன்
அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் பத்தையும் அடியார் கூட்டங்களில் ஓத
வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர்.
|