| என்மத் தகத்தே யிரவும் பகலும் | | பிரிவரியான் | | தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய | | சங்கரனே. | | 6 |
1066. | அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க | | ளையமுணல் | | வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு | | வானிரைக்கும் |
சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப்பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான். கு-ரை: உன்மத்தக மலர் - ஊமத்தம் பூ. உலகம் - ‘எல்லா வுலகமும்’. சுடலைப் பல் மத்தகம். சுடு காட்டிலிருந்த பல்லுடைய தலையையும் பலதலைகளையும் கோத்தமாலைகளையும், கொண்டு அணிந்துகொண்டு, பல் கடைதொறும் - பலவீட்டுக் கடை வாயில் தோறும். பலிதிரிவான் - பிச்சைக்காகத்திரிபவன். என் மத்தகத்தே - என் தலையின். இரவும் பகலும் பிரியான்:- ‘ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்’ (தி.4 ப.1 பா.1) தன் மத்தகத்து - தன் தலைமேல். ஓர் இளம்பிறை சூடிய சங்கரன். ஓர் இளம் பிறையை அணிந்த இன்பச் செயலன். சங்கரன் - இன்பஞ் செய்பவன். உன்மத்தம் என்பதே ஊமத்தம் என்று மருவியது எனல் ஈண்டு விளங்கும். உன் மத்தகம் என்றது ஆராயத்தக்கது. பின் மூன்றடிக் கண்ணும் மத்தகம் தலையைக் குறிப்பதாயினும், கொண்டது பிரம கபாலத்தையும் தலை மாலையையும். இரவும் பகலும் பிரியாதது பிரமரந்திரத்துள்ள சகச்சிரதளபங்கயத்தில்; பிறை சூடியது சடையில் என்றுணர்க. துவாத சாந்தத்தையும் இரவும் பகலும் பிரியாமைக்குரியதாகக் கொள்ளலாம். இரவு - கேவலம். பகல் - சகலம். கிரியா தீபிகை:- ‘பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்’ என்னும் திருவாசகத்தையும் நினைக. 7. பொ-ரை: விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே
|