பக்கம் எண் :

257
 

சுந்தரமூர்த்தி நாயனாருடன், சேரமான் பெருமாள் நாயனாரும் இங்கே வழிபட்டனர். இதற்குத் திருஞான சம்பந்தர் பதிகம் நான்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்து சுந்தரர் பதிகம் ஒன்ற ஆகப் பத்துப் பதிகங்கள் இருக்கின்றன.

இத்திருக்கோயிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுதற்கு வந்த எலி அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி அதன் விளைவாய் மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பர் சுவாமிகள் திருக்குறுக்கைத் திருநேரிசையில்எட்டாம் திருப்பாட்டில்.

“நிறைமறைக் காடு தன்னி னீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவானுலகமெல் லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே”

என அருளியுள்ளார்கள்.

தலபுராணம் இவ்வூரில் தோன்றி யருளியவரும் திருவிளையாடற்புராணம் எழுதியவருமாகிய பரஞ்சோதி முனிவரால் எழுதப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது.

மறைசையந்தாதி இது யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவரால் எழுதப்பெற்றது. புலவர் பெருமக்கள் பெரிதும் பாராட்டும் நூல் இவை.

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில்1 சோழமன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜ மன்னன், மூன்றாங் குலோத்துங்கசோழன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், இவர்களின் காலங்களிலும், விஜயநகர அரசர்களில் வீரப்பிரதாப மகாராயர், தேவராய மகாராயர் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவ்வூர் (மறைக்காடு) உம்பள நாட்டுக் குன்றூர் நாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டுக்கள் உணர்த்து


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1924. No. 415-503