| 23. | எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி | | முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன் | | அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது | | வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | | 3 |
| 24. | பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித் | | துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன் | | அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது | | சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன் | | கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | | 4 |
கையில் ஏந்தியவன். பெடை என்றதால் கோழி சேவலைக்குறித்தது கொழிப்பது கோழி. இதே பா.4 காண்க. 3. பொ-ரை: நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும், இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க. இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன். கு-ரை: எரி - நிலவு. ஏந்து இழையாள் - அம்பிகை. இலயம் - கூத்துக்கு ஒத்த தாளலயம் முகமலர்ச்சி. அகத்துவகையைக் குறித்தது. அருவி - ஆற்றிற்கு அடை. 4. பொ-ரை: பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது, இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன்.
|