பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை13

அடிகள் சேவடிக் கீழ் நாம் இருப்பது:

     திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்து அங்கேயே நிலையாகத் தங்கிவிடுவது என்ற குறிப்பில் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். அங்குத் தங்கி இருப்பதை இறைவன் சேவடிக்கீழ்த் தங்கியிருப்பதாகவே கொண்டார். அவ்வெண்ணங்கள் பாடல் வடிவு கொண்டன.

"அடிகள் சேவடிக்கீழ் நாம் இருப்பதே"
"தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே"
"ஆதி சேவடிக்கீழ் நாம் இருப்பதே"

தி. 5ப. 32பா. 1-10

என்ற பத்துப்பாடல்களிலும் பாடியுள்ளார்.
பூணியாய்ப் பணி செய்க:
     திருச்சோற்றுத்துறைப் பதிகமாகிய "கொல்லை ஏற்றினர்" என்ற பதிகம் முழுவதும், திருவடிக்கீழ் நாம் இருந்தாலும் பணி செய்வதில் குறை ஏற்படக்கூடாது என்பதில் கருத்தாய் இருக்கிறார் அப்பர். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்,
"சோற்றுத் துறையர்க்கே வல்லையாய்ப் பணி செய் மடநெஞ்சமே"
"பக்தியாய்ப்பணி செய்மடநெஞ்சமே"
"பட்டியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே"
(பட்டி - மீளா அடிமை.)
      "வாதியாய்ப் பணி செய் மடநெஞ்சமே"
(வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய் பணி செய்வது.)
      "பூணியாய்ப்பணி செய் மடநெஞ்சமே"
(பூணி - அன்பு.)
     இப்படி இப்பதிகம் முழுதுமே பாடியுள்ளமை கண்டு நாமும் பணிசெய்து உய்வோம். (தி. 5ப. 33பா. 1-10)
ஒருவர் தாம் பலபேர் உளர்:
     இறைவன் ஒருவரா, பலரா என்பது பலரது உள்ளத்தே எழும் ஐயம். இவ் ஐயத்திற்கு நம் சமயாசாரிய மூர்த்திகள் பல இடங்களிலும் பல்வேறு விதமாகவும் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்.
அவற்றுள் இது ஒரு இடம். திருச்செம்பொன்பள்ளி திருக்குறுந்தொகையில் "செம்பொன் பள்ளியார் ஒருவர்தாம் பலபேர் உளர் காண்மினே" என்றருளிச் செய்துள்ளார். கடவுள் ஒருவர்தான்.