பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்227

     நிலம் மூவேலி ஆக ஆறு வேலி நிலங்கள் தேவதானமாக விடப்பட்டிருந்தன.
வெள்ளைப் பிள்ளையார்:
     திருவலஞ்சுழியின் சனத்தொகை குறைந்துகொண்டேவந்தது. ஆகையால் ஊரின் நலங்கருதி வெள்ளைப் பிள்ளையார்க்கு திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பதினான்காம் ஆண்டில் நிலம் விடப்பட்டது. மற்றும் இப்பிள்ளையார்க்கு அளிக்கப்பெற்ற நிவந்தம் பலவாகும்.
இவ்வூரைத் தன்னகத்துக் கொண்ட நாடு:
     "உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர்நாட்டுத் திருக்குட மூக்கின்கால் திருவலஞ்சுழி" எனக் குறிக்கப்பெற்றிருப்பதால் இவ்வூர் உய்யக்கொண்டார்வளநாட்டுப் பாம்பூர்நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை அறியலாம்.
பிற செய்திகள்:
     முதலாம் இராஜராஜசோழன் 'சிவபாதசேகரன்' என்னும் பட்டம் பெற்றிருந்ததை இக்கோயிலிலுள்ள அவனுடைய இருபத்தொராம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகிறது. முதலாம் இராஜராஜதேவர் திருமகளார் விமலாதித்ததேவர் மகாதேவியார் ஸ்ரீ குந்தவை நங்கையார், நடுவில் பெண்பிள்ளைநங்கையார் மாதேவடிகளார் இவர்கள் இருவர்களின் பெயர்களும் இவ்வூர்க் கல்வெட்டில் காணக்கிடக்கின்றன.1

67.திருவன்னியூர்

     அன்னூர் என்று இக்காலம் வழங்கப் பெறும் இத்தலம், தஞ்சை மாவட்டத்தில் திருவீழிமிழலைக்கு வடமேற்கே மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது.

     1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902,1928 Numbers 618-634,192-213.
See also the South Indian Inscriptions,Volume VIII Numbers 215-238.