| இறைவர் பெயர்: அக்கினீச்சுவரர். |
| இறைவி பெயர்: பார்வதியார். |
| தீர்த்தம்: அக்கினி தீர்த்தம். |
| அக்கினி பூசித்த தலம். |
| அப்பர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் உளது. |
| 68.திருவாஞ்சியம் |
| இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி)த் திருமால் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. |
| மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ.தூரத்தில் இருக்கிறது. காவிரித்தென்கரைத் தலங்களுள் 70-ஆவது ஆகும். நன்னிலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம். |
| இறைவர் திருப்பெயர் வாஞ்சியநாதர். இறைவியார் திருப்பெயர் வாழவந்தநாயகி. |
| தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது. கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள் விசேடமாக நீராடுகின்றனர். |
| தலவிருட்சம் சந்தனமரம். இது பிராகாரத்தில் இருக்கின்றது. |
| இயமன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது மூவராலும் பாடப்பெற்றது. மூன்று பதிகங்கள் இருக்கின்றன. |
| கல்வெட்டு: |
| இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கரதுமாம். திருவாஞ்சியம் குலோத்துங்க சோழவளநாட்டில் பனையூர் நாட்டில் திருவாஞ்சியம் எனக் கூறப்பட்டது. இவ்வூருக்கு இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் |