பக்கம் எண் :

230தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(ஐந்தாம் திருமுறை)

     வழிபட வந்தவர் இங்கு இந்திரனால் உண்டாக்கப்பட்ட வேப்பமரத்தையும், இறைவரையும் வழிபட்டுத் திரும்பும்பொழுது வயிரவீரப்பெருமாள் என்னும் வீரவாகுவையும் வணங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர்.
     அப்பர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் உண்டு.

கல்வெட்டு:

     1இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் பரகேசரிவர்மரான உடையார் இராஜேந்திரதேவர் (கி.பி.1053-1063), முதற்குலோத்துங்க சோழதேவர், விக்கிரமசோழர், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னரில் எம்மண்டலமும் கொண்டருளிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் l காலத்திலும்; விஜயநகரவேந்தர்களில் அரியண்ண உடையார் மகனாகிய விருப்பண்ண உடையார் I I வீரநரசிம்மபூபால மகாராயர், சதாசிவதேவ மகாராயர் காலங்களிலும்; ஹொய்சல அரசர்களில் வீரசோமேஸ்வரன், வீரராமநாதன் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
     இக்கல்வெட்டுக்களில் இறைவர் மாணிக்கமலை மகாதேவர், மாணிக்கமலை உடைய நாயனார், திருமாணிக்கமலை உடைய தம்பிரானார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இறைவியார் திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்னும் பெயரால் அழைக்கப்பெறுகின்றனர்.
     இவரை எழுந்தருளுவித்தவன் சிவபாதசேகரபுரத்து வணிகனாகிய திருஞானசம்பந்த நம்பி ஆவன்.
     வடகொங்கில் இராஜராஜபுரத்தில் இருந்த புகலூர் தாமோதரனான பிள்ளைக்கடியார் இக்கோயிலில் உள்ள திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்துள்ளார்.
     கோயிலில் தட்சிணாமூர்த்தி தேவரை எழுந்தருளுவித்து, சோபானங்களை (படிக்கட்டுகளை)க் கட்டியவர் சிவ பாதசேகரத்து

     1See the Annual Reports on South Indian Epigraphy for the year 1914 No. 144-191.