பக்கம் எண் :

40பதிப்புரை(ஐந்தாம் திருமுறை)

திருமுறையைத் தமிழ் வேதம் என மொழியக் காணலாம்.
அத்திருப்பாடல்,
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயஎன்
றெண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே

-தி.5ப.51பா.6

என்பதாகும்.
     இனிமையும், எளிமையும் கருத்தாழமும் உடைய இத்திருமுறைப் பாடல்கள் பலராலும் பயிலப் பெறுபவை.
     இத்திருமுறையில் 1015 பாடல்களைக் கொண்ட 100 பதிகங்கள் அடங்கியுள்ளன. 88 பதிகங்கள் தலங்களைப் பற்றியவை. 12 பதிகங்கள் பொதுவானவை.
     அவை தனிக்குறுந்தொகை - 3, காலபாசத் திருக்குறுந்தொகை-1, மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை-1, தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை-1, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை-1, மனத்தொகை-1, உள்ளத்தொகை-1, சித்தத்தொகை-1, பாவநாசத் திருக்குறுந்தொகை-1, ஆதிபுராணத் திருக்குறுந்தொகை-1 என்ற பெயர்களால் வழங்கப்பெறும்.
    குறுந்தொகை என்பது யாப்பிற்குரிய பெயராகும். குறுகிய பாவினமாகிய கலிவிருத்த யாப்பில் இவை அமைந்துள்ளன.
இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்களாக உள்ளவை:
      -திருமறைக்காட்டில் மறைக்கதவம் திறக்கப் பாடியது.
      -நீற்றறை குளிரப் பாடியது.
      -வாய்மூருக்கு வரப்பணித்த இறைவரைப் பாடியது,
      -பழை யாறை வடதளியில் சமணரால் மறைக்கப்பட்ட
      சிவலிங்கக் காட்சியைக் காணப் பாடியது,
ஆகியனவாம்.
    இத்திருமுறையில் விளங்கும் காலபாசத் திருக்குறுந்தொகை மகா மிருத்யுஞ்சய மந்திரமாக விளங்குவது.
    இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை திருமால், பிரமர் அடிமுடி தேடி அயர்த்துத் தொழுதபோது பெருமான் சிவலிங்கமாக