பக்கம் எண் :

584திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1631.
கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்ததன்மையு மம்ம வழகிதே.

10

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும்.
     கு-ரை: கடுக்கை-கொன்றை. அம்-அழகிய. நடுக்கம் வந்து இற-நடுக்கமடைந்து நொறுங்க. அடுத்த-ஊன்றிய.
 

 

திருநாவுக்கரசர் புராணம்
 

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
   கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்,
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி
   புரண்டுவலங் கொண்டு போந்தே,
எப்புவனங் களும்நிறைந், திருப்பதியின்
   எல்லையினை இறைஞ்சி ஏத்திச்,
செப்பரிய பெருமையினார் திருநாரை
   யூர்ப்பணிந்து பாடிச் செல்வார்.

-தி.12.சேக்கிழார்.