உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும். கு-ரை:முத்தினை-முத்துப்போன்றவனை. முதலாகிய-முதற் பொருளாகிய. வித்தினை-உலகிற்கு மூலகாரணனாய் இருப்பவனை. விளைவாய விகிர்தனை-உலகில் எல்லாமாய் விரிந்து விளைந்து நிற்பவனை. விகிர்தன்-ஒன்றோடொன்று ஒவ்வாத போக, யோக, கோர வடிவங்களை உடையவன். அல்லல்-துன்பம். முன் பாட்டில் வினையாகிய காரணம் அழியும் என்றார். இங்கு அதன் காரியமாகிய துன்பம் கெடும் என்கிறார். 3. பொ-ரை: வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் நெஞ்சு கலந்து பொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும், மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை. கு-ரை: வெண்டிரைப்பரவை -வெள்ளிய அலைகளோடு கூடிய கடல். கண்டனை- கழுத்தை உடையவனை கலந்தார் தமக்கு- அன்பால் தம்மோடு மனமொத்தவர்க்கு("கலந்த அன்பாகி" தி.8 திருவாசகம்.) கொண்டலம் பொழில்-மேகங்கள் சூழ்ந்த பொழில். அண்டனை-எல்லா உலகமுமாயவனை. 4. பொ-ரை: வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால், கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும், |