சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக. கு-ரை: அறிவொணா - அறியமுடியாத. பாலின் மென்மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி. நித்தல் நாடோறும். 10. பொ-ரை: அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி, அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும், பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோளிலிக்கு விருப்பமாகி, அவன் அடிகளே தொழுது உய்வீராக. கு-ரை: அம்முடி - அழகிய முடி. இறுத்தான் - அழித்தவன். அவற்கு - அவனுக்கு. அருத்தி - ஆசை. | திருப்பெருந்துறைப் புராணம் பாலிடை நஞ்சங் கண்டு பதைபதைத் தோடி யோர்பால் நூலிடை யவருண் பாக்கு நுவன்றமா லயனுண் ணாணப் பாலிடை நஞ்சங் கண்டு பதைப்பின்றித் தாமுண் டோர்பால் நூலிடை யவரே யென்னப் பொலியுநோன் மையர்தாள் போற்றி. -மீனாட்சி சுந்தரம்பிள்ளை. | | |