திருமறைக்காட்டை விரும்பி உறையும் இடமாகக் கொண்டுள்ளார் சிவபெருமான். இங்குள்ள பெருமான் அஷ்ட புஷ்பம் என்னும் எண்மலர்களை வட்டமாகச் சுற்றிய சடைமிசைச் சூடியுள்ளார்என்கிறார். எண் மலர்களாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோத்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம். இவ்வெட்டு மலர்களும் புறப்பூசையில் வழிபடற்கு உரியன. அகப்பூசைக்கு உரிய எண் மலரையும் நாம் தெரிந்து வழிபடல் நன்மை தருவதாம். அவையாவன: கொல்லாமை, அருள், பொறிஅடக்கல், பொறை, |