பக்கம் எண் :

606திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1664.
துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.

3

1665.

தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.

4


     கு-ரை: ஆலத்து - கல்லாலமரத்து. ஆர் - பொருந்திய. கோலத்தால் - அழகிய தமது தோற்றத்தால். வாக்கினால் சொல்லாது வீற்றிருந்த நிலையும் காட்டிய ஞானமுத்திரையுமாகிய கோலத்தால் என்க. உரை செய்தவன் - சொல்லாமற் சொன்னவன். ஆர் அருள் - அரிய திருவருள். ஏல - ஏற்புடைத்தாக.
    3. பொ-ரை: தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும், ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி, அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம்.
    கு-ரை: துணிவண்ணம் - பகைவரைத் துணிக்கின்ற தன்மை. சுடராழி - ஒளியையுடைய சக்கரம். கொள்வான் - கொள்வதற்காக. எண்ணி - நினைத்து. அணி - அழகிய. வண்ணத்து - செந்நிறத்து. அலர் - தாமரை மலர். மணி வண்ணனுக்கு - நீலமணி போன்ற கரிய நிறத்தையுடைய திருமாலுக்கு. பணிவண்ணத்தவர்க்கு - பணியும் தன்மையையுடையவர்க்கு.
    4. பொ-ரை: தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது, கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப்போது வீராக; உம் வினையாயின போகும்.
    கு-ரை: தீதவை செய்து - தீமையாயினவற்றைச் செய்து. தீவினை வீழாதே - தீவினையின்கண் சாராது. போதுமின் எனக்