பக்கம் எண் :

608திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே.

7

1669.
முன்ன வன்னுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே.

8

1670.
வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.

9


இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற்பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை.
     கு-ரை: மழுவலான் - மழுவாயுதத்தை வலக்கரத்தே ஏந்தியவன். திருநாமம் - திருவைந்தெழுத்து. வழுவில் - குற்றமில்லாத. அன்பு செய்து அழவலார்களுக்கு, இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் என்க.
     8. பொ-ரை: உலகினுக்கு முன்னேதோன்றியவனும், முழுமணியும், பொன்னும், விளங்கும் முத்தும், போகங்களும் ஆக விளங்கும். மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள்.
     கு-ரை: உலகுக்கு முன்னவன் என்க. முழுமணிப் பொன்னவன் - முழுமணி போன்றவன் பொன் போன்றவன் என்க. போகமாம் மன்னவன் - போகத்தைச் செய்பவனாகியும் போகப் பொருளாகியும் நிற்கும் தலைவன்.
     9. பொ-ரை: அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள்.