பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)60.திருமாற்பேறு611

1674.
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே.

3

1675.

இருந்து சொல்லுவன் கேண்மின்க ளேழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.

4


     கு-ரை: நிச்சலும் - நாடோறும். நித்தல் என்பதன் மரூஉ. நினையாய் - நினைப்பாயாக. கச்ச - கைத்த என்பதன் மரூஉ. எல்லோர்க்கும் கசந்த. மா - கரிய. என - என்று சொல்ல. வைச்சமாநிதி - சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன் தருவர்.
     3. பொ-ரை: சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.
     கு-ரை: சிவபெருமானிடத்து அன்பும் நினைப்பும் இல்லாதொழியின் யாவும் பயன்தரா என்று கருத்து விளக்கப்படுகிறது. சாத்திரம் - சமய இலக்கண வரம்பு. சழக்கர் - அறிவற்றோர்; பொய்யர். கோத்திரம் - சிறந்தார் ஒருவரின் பரம்பரையைச் சுட்டியுரைப்பது. குலம் - சாதி. பாத்திரம் - வணங்கப்படுதற்குரியவர். பணிதிரேல் - பணிவீரேயானால். மாத்திரைக்குள் - கணப்பொழுதிற்குள். சாத்திரம் கோத்திரம் குலம் முதலாயினவற்றையே கருதி உண்மைப் பொருளை உணரும் பயனை அறியாதொழுகினாரை வெறுத்தது. இதுகொண்டு இவற்றை வெறுப்பதாகக் கூறல் தவறு. தம்மை மறந்த நிலையில் தாமே அவை நீங்கும், தூங்கினவன் கைப்பொருள்போல என்பதாம்.
     4. பொ-ரை: அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப்