| 61. திருவரிசிற்கரைப்புத்தூர் |
| பதிக வரலாறு: |
| திருப்பழையாறை வடதளியினின்றும் திருவானைக்காவிற்குச் செல்லும்பொழுது பொன்னியின் இருமருங்கும் உள்ள சிவதலங்களைப் பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத் தமிழ்மாலை. (தி.12.திருநா.புரா.301.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:174 | பதிக எண்:61 |
| திருச்சிற்றம்பலம் |
1680. | முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம் பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே. | |
| 1 |
1681. பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் | |
|
| 1. பொ-ரை: மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் "திருவடி போற்றி" என்று கூறுவோரெல்லாம், பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு, பொருந்திய வன்மை உடையதாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள். |
| கு-ரை: முத்தூரும் புனல் - முத்துக்களை ஊர்ந்து செல்லும் தண்ணீர். அரிசிற்கரை- அரிசிலாற்றங்கரை. மொய் - நிறைந்த. போற்றியென்பாரெலாம் - போற்றி என்று சொல்வாரெல்லாரும். பொய்த்தூரும் புலன் ஐந்து - அழிவையே மேற்கொண்டுள்ள ஐந்து புலன்கள். புல்கிய - சேர்ந்த. மைத்து ஊரும் வினை - கரிதாய் மயக்கம் செய்து வருகின்ற வினைகள். மாற்றவும் நீக்கவும். வல்லர் - வல்லமையுடையர். |
| 2. பொ-ரை: வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி, தம்முடைய குற்றங்களை எண்ணி உணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே! |