1694. குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் அண்ட னைக்கண் டருவினை யற்றெனே. | |
| 5 |
1695. பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட மைந்த னைம்மண வாளனை மாமலர்க் கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே. | |
| 6 |
1696. | உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை அம்ப ரானை யமலனை யாதியைக் கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே. | |
| 7 |
|
| 5. பொ-ரை: மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும், திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன். |
| கு-ரை: குண்டுபட்ட குற்றம்-சமணர்களிடையே அகப்பட்ட குற்றம். தவிர்த்து - நீக்கி. கண்டனை -நீலகண்டனை. அண்டன்- உலகங்களின் வடிவானவன். அற்றேன்- நீங்கினேன். |
| 6. பொ-ரை: பாசமாகிய கட்டினை அறுத்து, என்னை ஆட்கொண்ட பெருவீரனும், மணவாளக்கோலம் உடையானும், பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று. |
| கு-ரை: பந்தபாசம் -அன்புப் பிணிப்பாகிய ஆசை. மைந்தனை- வலிமையுடையவனை. கந்தம் - மணம். கண்டு- காணுதலால். இனிதாயிற்று-என் வாழ்வு இனிதாயிற்று என்க. |
| 7. பொ-ரை: தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும், உருத்திரமூர்த்தியும், அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும், மலம் |