பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)62.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்623

1699.
அரக்க னாற்ற லழித்தவன் பாடல்கேட்
டிரக்க மாகி யருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே.

10

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: இடுவாரிட்ட -கொடுக்கும் குணமுள்ளவர் இட்ட. கவளம் - சோற்றுருண்டை, கவர்ந்து -உண்டு. இரு -பெரிய. கடுவாயிட்டவர் - கடுக்காயை வாயின்கண் இட்டவர். கட்டுரை - அறிவுரை. கொள்ளாதே- ஏற்றுக்கொள்ளாமல்; தம்முன்னைநிலை நினைந்து கூறியது. ஆட்படவே பெற்று - ஆளாகுந்தன்மையையே பெற்று. நான் பாக்கியம் செய்தேன் - நான் சிறந்த பாக்கியத்தைச் செய்தவனானேன்.
     10. பொ-ரை: இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய, அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன்.
     கு-ரை: ஆற்றல் -வலிமை. திரைக்கொள் -அலைகளைக் கொண்ட.

திருவாப்பனூர்ப் புராணம்

மண்ணாசை பெண்ணாசை மூன்றுநீத்து
   மனத்தாசை யறவெறிந்தா னந்த நீர்பாய்
கண்ணாசை சிவபெருமான் காட்சிக் காக்கிக்
   கருத்தாசை யவனருட்கே கைம்மா றாக்கி
யுண்ணாசை மருந்தனையார் புகலூர் மன்னு
   முழவாரப் படையாளி யுருகிப்பாடும்
பண்ணாசைத் திருநாவுக்க கரையன் பாதம்
   பத்திபழுத் தொழுகநெஞ்சிற் பதித்து வாழ்வாம்.

-கந்தசாமிப்புலவர்.