பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)63.திருத்தென்குரங்காடுதுறை625

1702.
குளிர்பு னற்குரங் காடுது றையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் னுள்ளமும்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.

3

1703.

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடுதுறைதனில்
அணவன் காண்அன்பு செய்யு மடியர்க்கே.

4


மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில் தித்தித்திருந்தனன் அப்பெருமான்.
     கு-ரை: பவளத்து ஒளிர் தொத்து - ஒளிர் பவளத் தொத்து என மாறுக. விளங்கிய பவளக் கொத்துப் போன்றவன் என்பது பொருள். கொத்தலர் சோலைசூழ் குரங்காடுதுறை என்க. அண்ணித்தல்-இனித்தல்.
     3.பொ-ரை: குளிர்கின்ற நீர் சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப் போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும் ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தெளிவுறும்படித் தெளிவினைத் தெளிந்தது.
     கு-ரை: தளிர்நிறத் தையல் -தளிர்போன்ற நிறத்தையுடைய பார்வதி. உள்ளம் -மனம். தெளிவினை - தெளியவேண்டிய பொருளாயுள்ள இறைவனை. தெளிய - விளங்க, தெளிந்திட்டது- உணர்ந்து தெளிந்து கொண்டது.
     4. பொ-ரை: அன்புசெய்யும் அடியார்க்கு மணவாளக்கோலம் உடையவனும், மலைமகளாகிய உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற் காதலிக்கப்பெறுவானும். எண் குணத்தானும், குரங்காடுதுறையில், அண்ணியவனும், ஆவன்.
     கு-ரை: மணவன் - எப்பொழுதும் மணவாளனாயிருப்பவன். மலைமகளாய பார்வதிக்கு நித்யமங்கலத்தைச் செய்யும் கணவன் என்க. கலைஞானிகளால் காதல் செய்யப்படும் எண்குணவன் என்க.