1708. தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் அன்ற வந்தக னைஅயிற் சூலத்தால் கொன்ற வன்குரங் காடு துறையனே. | |
| 9 |
1709. | நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம் உற்ற நன்மொழி யாலருள் செய்தநல் கொற்ற வன்குரங் காடு துறைதொழுப் பற்றுந் தீவினை யாயின பாறுமே. | |
| 10 |
|
| தெருவுதோறலைகிலை செய்வதொன்றறியேனே". (தி.8 திருவாசகம் -35.) |
| 9. பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் 'இறைவன், தென்றலாகிய நல்ல நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க விழித்தவனும், அன்று காலனைக் கூரிய சூலத்தாற் கொன்றவனும் ஆவன். |
| கு-ரை: தென்றல் தேருடையான் -மன்மதன். நன்னெடும்-நல்ல பெரிய. பொன்ற -அழிய. வெங்கனல் பொங்க -கொடிய கோபத்தீ பெருக. விழித்தவன் -நெற்றிக்கண்ணால் சினந்தவன். அன்று அவ்வந்தகன் எனப் பிரித்து மார்க்கண்டேயர் வேண்டிய அன்று அந்த இயமனை என்க. அயில் - கூரிய. |
| 10. பொ-ரை: நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும். |
| கு-ரை: நால்வர். -சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் உற்ற -பொருத்தமான.நல்மொழி-நல்ல உபதேச மொழி. பற்றும் -நம்மைப் பிடிக்கும். பாறும்-அழியும். |