பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)63.திருத்தென்குரங்காடுதுறை629

1710.
கடுத்த தோரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லும்மவ னின்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே.

11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன்.
     கு-ரை: கடுத்த - விரைவான். தலையிற்றலற -தலை நெரிந்தலற. விரல் அடுத்தலும் -விரல் ஊன்றலும்.

உறையூர்ப் புராணம்

கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா
   ரப்படையுங் கவின்வெண் ணீறுஞ்
சிந்தையிடை யறாவன்புஞ் சிவஞானம்
   பழுத்தொழுகு செய்யவாயுந்
தந்தையொடு தாயிலான் றிருவடிதை
   வருமனமுந் தாரைக் கண்ணு
நிந்தையறு முழுத்துறவு முடையபிரா
   னடிபணிந்து நீடு வாழ்வாம்.

-மீனாட்சி சுந்தரம்பிள்ளை