| 65. திருப்பூவனூர் |
| பதிக வரலாறு: |
| ஞான அரசு திருப்பழையாறை வடதளி வணங்கித் திருவானைக்காவிற்குச் செல்பொழுதில் பொன்னியின் இருமருங்கும் உள்ள சிவதலங்களைப் பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.301.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:178 | பதிக எண்:65 |
| திருச்சிற்றம்பலம் |
1722. | பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான் நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார் பாவ மாயின பாறிப் பறையவே தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே. | |
| 1 |
1723. என்ன னென்மனை யெந்தையெ னாருயிர் தன்னன் தன்னடி யேன்தன மாகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் இன்ன னென்றறி வொண்ணா னியற்கையே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர், தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர். |
| கு-ரை: புனிதன் - தூயவன். நூறுநூறாயிரம் - ஒரு கோடி. நண்ணினார் - ஓதியவர். பாறி - அழிந்து. பறைய - நீங்க. ஏ அசை. தேவர்கோ - இந்திரன். |
| 2. பொ-ரை: பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன்; என் மனையாளாகவும் உள்ளவன்; என் தந்தை; என் உயிர்; தனக்குத்தானே உவமையானவன்; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன்; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன். |