1737. விண்ட வர்புர மூன்று மெரிகொளத் திண்தி றற்சிலை யாலெரி செய்தவன் வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே. | |
| 5 |
1738. | படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான் மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே. | |
| 6 |
1739. | நாக்கொண் டுபர வும்மடி யார்வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் மாக்கொள் சோலை வலஞ்சுழி யீசன்றன் ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே. | |
| 7 |
|
| 5. பொ-ரை: பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ளமிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய, வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன். |
| கு-ரை: விண்டவர் - அறத்தின் நீங்கியவர். மனம் பொருந்தாது நீங்கிய பகைவர். திண்டிறற்சிலை - திண்ணிய வலிமையோடு கூடிய இமயவில். முரலும் - ஒலிக்கும். அண்டன் - உலகங்களை உடையவன். அடிமைத்திறத்தாவன் - அடிமையாம் திறத்தை நான் அடைந்தவனாவேன். ஏ - அசை. |
| 6. பொ-ரை: படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும், தேவர் தலைவனும், மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன். |
| கு-ரை: பால்மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன். அஞ்சடை அடங்க - அழகிய சடையின்கண்ணே அடங்கியிருக்க. உம்பர்தம் பிரான் - தேவர்கள் தலைவன். |
| 7. பொ-ரை: நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்த |