பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)66.திருவலஞ்சுழி645

1742.
இலங்கை வேந்த னிருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.

10

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய, மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன.
     கு-ரை: இற - நொறுங்க. நலங்கொள் - பிறருக்கு நன்மை செய்யும் குணத்தைக் கொண்ட. மலங்கு - மீன் வகையில் ஒன்று. வலங்கொள்வார் -வலம்செய்வார். "திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு துன்பங்கள் களைவாரே" திருஞானசம்பந்தர் தேவாரம் (தி.2.ப.106.பா.9.) அருளியமையையும் காண்க.

திருக்குறுக்கைப் புராணம்

இருளென்று சொலத்திரிவார் மனம்வேவ
   நீற்றறையு ளிருந்து முற்றேம்
வெருளென்று துயர்க்கடலு ளவரழுந்தக்
   கருங்கடற்கண் மிசைமி தந்து
மருளென்று மாறாத வெண்ணீறுங்
   கண்மணியு மைந்தெ ழுத்தும்
பொருளென்று தெரிவித்த புண்ணியவா
   கீசர்பதம் போற்றி வாழ்வாம்.

-மீனாட்சி சுந்தரம்பிள்ளை