| * * * * * * * * * * * * * * * * * |
| 7,8,9 |
1749. அருக்க னங்கி யமனொடு தேவர்கள் திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர் ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம் அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
|
| 10. பொ-ரை: சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை. |
| கு-ரை: அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. திருத்தும் - அவர்களைத் தவறு நீக்கித் திருத்தும். அருத்தி - ஆசை. அல்லல் - துன்பம். |
| தனியூர்ப்புராணம் | | முகத்தின்மண் முழுதிடந்து முன்னவன் பாதங் காணா னகத்தினா ணடைய வங்கை யலர்நெறி யுழவா ரத்தி னிகத்தின்மண் மேலி டந்தவ் விறையடி தலைமேற் சூட்டச் சுகத்தினல் லூரிற் பெற்ற தூயரைத் துதித்து வாழ்வாம். | | -மீனாட்சி சுந்தரம்பிள்ளை | | சூத சங்கிதை | பரசிவமென் றடியவரைப் பகருமறை களிதூங்கப் பலரும் போற்றப் பிரசநறுங் கடுக்கைமுடி யப்பரன்போல் விடநுகர்ந்து பெயராச் சீற்றப் புரிசைநெடுங் களிற்றினைவென் றெழுவிடைவென் முழுவிடைசூல் பொலியக் கொண்ட வாரசுதிருப் பாதமலர் பரசுபுமெய்ப் போதமூறீஇ யமைந்து வாழ்வாம். | | -தே. ராசுப் பிள்ளை | | | |