1769. பாரு ளீரிது கேண்மின் பருவரை பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
|
| கு-ரை: நம்புவீர் - உறுதியைக் கேட்டுணரும் விருப்பமுடையீர். நம்பு - விருப்பம். எம்பிரான் - எமது தலைவன். ஏத்தும் - வணங்கும். கம்பனார் - திரு ஏகம்பத்துறையும் பெருமானார். கம்பன் - பிறருக்கு நடுக்கத்தைச் செய்வன். கொம்பனார் - பூங்கொடி போன்ற அழகிய பெண்கள். |
| 10. பொ-ரை: உலகிலுள்ளவர்களே! இது கேட்பீராக! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக. |
| கு-ரை: பாருளீர் - உலகின்கண் உள்ளவர்களே! பருவரை - பெரிய மலை. பேருமாறு - பெயரும்படி. கார்கொள் நீர் - கருமை நிறத்தைக் கொண்ட தண்ணீர். இராவணனுக்கு அருள் செய்தது உலக மறிந்த நிகழ்ச்சியாகலின் பாருளீர் இதுகேண்மின் என விளித்தார். |
| திருநாவுக்கரசர் புராணம் | திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டி னெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி லொருநாவுக் குரைசெய்ய லொண்ணாமை யுணராதேன். | | -தி.12.சேக்கிழார். | | | |