| 70. திருக்கொண்டீச்சுரம் |
| பதிக வரலாறு: |
| ஞானவரசு திருவீழிமிழலையையும் திருவாஞ்சியத்தையும் போற்றித் திருமறைக்காட்டிற்குச் செல்லும்பொழுது புனிதர் வாழ் பதிகளைப்பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத்தமிழ்மாலை. (தி.12.திருநா.புரா.263.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:183 | பதிக எண்:70 |
| திருச்சிற்றம்பலம் |
1770. | கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக் கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே. | |
| 1 |
1771. சுற்ற முந்துணை நன்மட வாளொடு பெற்ற மக்களும் பேண லொழிந்தனர் குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார் பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது, சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக. |
| கு-ரை: கண்ட பேச்சினில் - பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு. காளையர் தங்கள் பால் - இளைஞர்களிடத்து. மண்டி - நெருங்கி. ஏச்சுணும் - பின் அவரால் ஏசும்மொழிகளைப் பெறும். கழல் கூறும் - திருவடிகளின் பெருமைகளைக் கூறுங்கள். மாதராரிடத்து அல்லற்படுகிறவர்கள் இறைவன் திருவடிகளைப் பற்றினால் இன்புறுவர். |
| 2. பொ-ரை: சுற்றத்தாரும், வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால், குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒருபற்று மற்று இல்லை. |