1772. மாடு தானது வில்லெனின் மாநுடர் பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற் கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப் பாடு மின்பர லோகத் திருத்துமே. | |
| 3 |
1773. | தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்மின் அவனடி சேரவே. | |
| 4 |
|
| கு-ரை: சுற்றமும் - சுற்றத்தினரும். துணை - துணைவியாகிய. பேணலொழிந்தனர் - விரும்புதலைத் தவிர்ந்தனர். பற்றலால் ஒருபற்று மற்றில்லை - இறைவனே பற்றுக்கோடாவான் வேறு ஒரு பற்றுக்கோடில்லை. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள். 350) " என்னிலாரும் எனக்கினியாரிலை" (தி.5.ப.21.பா.1.) உலகில் இறைவனது சார்பில்லாது பிறிது ஒரு சார்பில்லை என்று அநுபவம் காட்டியவாறு. |
| 3. பொ-ரை: செல்வம் இல்லையென்றால், மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை. ஆதலால், பல மாலைகளாற் கூட, நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும். |
| கு-ரை: மாடுதானது இல்லெனில் - செல்வம் இல்லையானால். செல்வம் இல்லையானால் அவரவரும் தம்போக்கிற் செல்வர். பாடு - பக்கம். செல்வாரும் என உம்மைதொக்கது. மாநுடர்பாடுதான் செல்வாரில்லை - மனிதர் பெருமையோடு ஒருவரிடத்துச் செல்லுதல் இல்லை. அடியாருடன் நீர் சென்று பலவகைப்பட்ட திருப்பதிகப் பாமாலைகளால் பாடுங்கள். இருத்தும் - அப்பெருமான் இருக்கச் செய்வான். |
| 4. பொ-ரை: தந்தையும்தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக. |
| கு-ரை: தந்தை தாய் மனைவி என்னும் பிணைப்பு "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை" |