பக்கம் எண் :

190
 

இளநாங்கூர்:

இது பெரும்பற்றம்புலியூரின் மேல்பிடாகை ஆகும். இவ்வூர்க்கல்வெட்டில் கங்கைகொண்ட சோழப்பேரிளமை நாட்டு இளநாங்கூரான சுந்தரசோழ பாண்டியநல்லூர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

எருக்காட்டுச்சேரி:

இது பெரும்பற்றப்புலியூரின் கீழ்ப்பிடாகை ஆகும். இவ்வூர் கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச்சேரியான ஜயங்கொண்ட சோழநல்லூர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

குமாரமங்கலம்:

இதுவும் பெரும்பற்றப் புலியூரின் கீழ்ப்பிடாகை ஆகும். இது கிடாரங்கொண்ட சோழப் பேரிளமைநாட்டுக் குமாரமங்கலமானதில்லை அழக நல்லூர் எனக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கொற்றங்குடி:

இது பெரும்பற்றப்புலியூரின் கீழ்ப்பிடாகை ஆகும். இது கொற்றங்குடி ஆனபவித்திரமாணிக்கநல்லூர் என்று கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது.

நல்லாலி:

இது பெரும்பற்றப்புலியூரின் பிடாகை ஆகும். இதற்குவிக்கிரம சோழநல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு.

கோயில்பூண்டி:

இக்காலம் கோயிலாம்பூண்டி என்று வழங்கப் பெற்று வருகின்றது. இதற்கு க்ஷத்திரிய சிகாமணிநல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு.

மிதுனக்குடி:

இது பெரும்பற்றப்புலியூரின் பிடாகையைச் சேர்ந்ததாகும். இதற்குத் தானவிநோதநல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு.