பக்கம் எண் :

339
 

தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்.

தலவிருட்சம் : வீழிச்செடி.

கல்வெட்டு :

இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்கள் 68. வீழிமிழலை என்றே இத்தலம் வழங்கப்பெறுகின்றது. முதற் குலோத்துங்கன் காலத்து உலகுய்யக்கொண்ட சோழவளநாட்டு வேணாட்டுப்பிரமதேயம் திருவீழிமிழலை என வழங்கியது. சுவாமி பெயர் வீழிநாதர், வீழி மிழலைநாதர் என்பன. கோயில் பிராகாரத்தில் சிலரால் பிரதிட்டை செய்யப்பெற்ற நின்றருளிய நாயனார், நெறிவார்குழலி நாச்சியார், திருவேட்டீஸ்வரமுடைய மகாதேவர், திருவேகம்பமுடையார் 1, பார்வதீஸ்வரமுடையார் 2, திருத்தண்டூன்றிய மகாதேவர் 3 கோயில்களும் பிரதிட்டிக்கப்பெற்ற இடங்களும் குறிக்கப்பெறுகின்றன 4. அம்மை, காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப் பெறுகிறார். திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்திருந்தன. முன்னிருவருடைய மடங்களும் வடக்குவீதியில் இருந்தன என்பதும் அறியக் கிடக்கின்றன.

ஆதித்தன் மகனாகிய முதற் பராந்தகன் காலத்திலிருந்து பதினொரு சோழமன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்களும், சடாவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியதேவன் கல்வெட்டுக்களும் விஜயநகர பரம்பரையைச்சேர்ந்த விருப்பண்ண உடையார் கல்வெட்டு ஒன்றும், பெயரறியப்பெறாதன பதினான்குமாக அறுபத்தெட்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இராஜேந்திர சோழன் திருவூழிமிழலை வடக்கு வீதியிலுள்ள திருநாவுக்கரசர் திருமடத்திற்கு நிலம்விட்ட செய்தி அறியப்டுகிறது 5. மூன்றாம் இராஜராஜன் திருவீழமிழலைக் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் திருவாதவூரர் மாணிக்கவாசகர் படிமத்தைப் பிரதிஷ்டை செய்தான் 6. சடாவன்மன் சுந்தரபாண்டிய தேவன் திருக்கை கொட்டித் திருப்பதியம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான் 7. முதல் இராஜராஜ சோழன் காலத்தில் ஐப்பசி ஓணத் திருவிழா தரிசனத்திற்காக வரும் அன்பர்களுக்கு அன்னம் வழங்கக் காசு அளிக்கப்பட்ட செய்தியும் இவ்விழா மிகச் சிறப்பாக நடை பெற்றமையும் அறிவிக்கும் 8. முதற் 


1. 417 of 1908,

2. 418 of 1908, 

3. 436 of 1908, 

4. 392 of 1928.

5. 402 of 1908, 

6. 409 of 1908, 

7. 414 of 1908, 

8. 422 of 1908.