பக்கம் எண் :

403
 

திருத்தொண்டத்தொகை யருளியது :

இறைவனருளால் அடியார்களுக்கு ஆட்பட்ட திறத்தினைக் குறிக்கும் பகுதிகள் :

"ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டு"

(தி. 7 ப. 21 பா. 2)

"பண்டே நின்னடியேன் அடியாரடியார்கட் கெல்லாம்
தொண்டே பூண் டொழிந்தேன்"

(தி. 7 ப. 24 பா. 4)

நெல்லிட ஆள்வேண்டிப் பெற்றது :

பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்கு எடுத்து வருதற்பொருட்டுப் பணியாள் வேண்டிப்பெற்ற குறிப்பு கோளிலித் திருப்பதிகத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது.

"கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப்

பெற்றேன்

ஆளிலை யெம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே"

தி. 7 ப. 20 பா. 1 10)

 

"பரவையவள் வாடுகின்றாள்"

(தி. 7 ப. 20 பா. 8)

"பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே"

(தி. 7 ப. 20 பா. 6, 3)

"நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்தேத்திய பத்தும்"

(தி. 7 ப. 20 பா 10)

கோட்புலியார் புதல்வியரைத் தம் மகளாகக் கருதியது :

திருநாட்டியத்தான் குடியில் கோட்புலியார் மகளிரைத் தம் புதல்வியராகக் கொண்டருளினார் சுந்தரர்.