"கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற | கொடிறன் கோட்புலி சென்னி | நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி | நம்பியை நாளும் மறவார் | சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் | திருவா ரூரன்.." | (தி. 7 ப. 15 பா. 10) | "வனப்பகை யப்பன்" | (தி. 7 ப. 87 பா. 10) | "வனப்பகையப்பன்.......சிங்கடிதந்தை" | (தி. 7 ப. 57 பா. 12) |
பொன் பெற்றது : திருப்புகலூரில் சுந்தரர்க்கு இறைவன் செங்கல்லைப் பொன்னாக்கி யளித்தனன். இக் குறிப்பு நம்பியாண்டார் நம்பிகளால் விளக்கப்பெற்றுள்ளது. "புகலூர் பாடுமின் இம்மையே தரும் சோறும் கூறையும்" (தி. 7 ப. 34 பா. 1) "தென்புகலூர் அரன்பால் தூயசெம்பொன் கொள்ளவல்லவன்" -தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 57 பனையூரில் ஆடல் கண்டருளியது : திருப்புகலூரிலிருந்து திருவாரூர் செல்லும் சுந்தரர்க்குப் பெருமான் திருப்பனையூர் எல்லையில் ஆடல் காட்டியருளினான். "பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற் குழைதூங்கத் தொண்டர்கள் துள்ளிப்பாட நின்று ஆடுமாறு வல்லார்" (தி. 7 ப. 87 பா. 1) மழபாடியை வழிபட்டது : திருவாலம்பொழிலில் சுந்தரர் தங்கியிருந்த காலத்தில் இறைவன் கனவில் தோன்றி 'மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ'
|