13


இத்திருக்கோயிலில்   தம்   தந்தையாராகிய       பொன்மாளிகைத்
துஞ்சியதேவர்   (இரண்டாம்   பராந்தகதேவர்)  தமது    தாயாராகிய
வானவன்மாதேவியார்,    தட்சிணமேரு   விடங்கரின்    பிராட்டியார்
உமாபரமேஸ்வரியார்,      தஞ்சை      விடங்கரின்    பிராட்டியார்
உமாபரமேஸ்வரியார் இவர்களின் திருமேனிகளையும்;

இராசராசதேவர்      தேவிமார்களில்      ஓலோகமாதேவியார்,
பிச்சதேவரையும்:  திரைலோக்கிய  மாதேவியார், கல்யாணசுந்தரதேவர்
இவரது     பிராட்டியார்     இவர்களையும்,     அபிமானவல்லியார்,
இலிங்கபுராணதேவர்,     பிரமன்,       விஷ்ணு     இவர்களையும்,
சோழமாதேவியார்,  இடபவாகனதேவர்  இவர்   தம்   பிராட்டியார்
உமாபரமேஸ்வரியார்     இவர்களையும்;     பஞ்சவன்மாதேவியார்,
தஞ்சையழகர் இவர் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார் இவர்களையும்:
இலாடமாதேவியார்    பாசுபதமூர்த்தி்யையும்;    பிருதுவிமாதேவியார்
ஸ்ரீகண்டமூர்த்திகளையும்;

இராசராசதேவர்   அரசியல்   அலுவலாளர்களில்,   அதிகாரிகள்
காஞ்சிவாயில் உடையான் உதையதிவாகரன் தில்லையாளியாரான
இராசராச மூவேந்தவேளார்,க்ராதார்ஜு ந தேவரையும்;இராசராசதேவர்
பெருந்தரம்   வேளான்   ஆதித்தனான   பராந்தகப்  பல்லவரையர்
உமாசகிதர்,  இவர் தம் பிராட்டியார்; சுப்பிரமணியதேவர், கணபதியார்
இவர்களையும்;   இராசராசதேவர்   பெருந்தரம்,   உய்யக்கொண்டார்
வளநாட்டு   வெண்ணாட்டுக்  கேரளாந்தகச்   சதுர்வேதி  மங்கலத்து
நாரக்கன்   ஸ்ரீ  கிருஷ்ணன்   மும்முடிசோழ    பிரமாதிராயன்,
அர்த்தநாரீஸ்வரரையும்;  இராசராசதேவர்   சிறுதனத்துப்  பெருந்தரம்
கோவன் அண்ணாமலையான  கேரளாந்தக விழுப்பரையன், பிருங்கீசர்,
சூரியதேவர் இவர்களையும்: ஸ்ரீ காரியஞ்செய்த பொய்கைநாடு  கிழவன்
ஆதித்தன்   சூரியனான    தென்னவன்     மூவேந்தவேளான்,
திருஞானசம்பந்த  அடிகள், திருநாவுக்கரையதேவர், நம்பி ஆரூரனார்,
நங்கை  பரவையார், முதலாம்  இராசராச  சோழர், இவரது  தேவியார்
ஓலோகமாதேவியார்     “தத்தாநமரே’’   என்ற     மிலாடுடையார்
(மெய்ப்பொருள்  நாயனார்),  சிறுத் தொண்ட நம்பி ; திருவெண்காட்டு
நங்கை, சீராளதேவர்  இவர்கள் பிரதிமங்களையும் ; சந்திரசேகரதேவர்,
க்ஷேத்திரபாலதேவர்   இவர்களின்   திருமேனிகளையும்;  ஈராயிரவன்
பல்லவரையனான    மும்முடிச்சோழ    போசனான   உத்தமசோழப்
பல்லவரையன் சண்டேசுவரதேவரையும் எழுந்தருளுவித்துள்ளனர்.