40. ஆடு அரவு-படம் எடுத்து ஆடுந்தன்மை யுடைய பாம்பு. ஆட-அது, தன் மேனியில் இருந்து அசைய. என்னும்- என்று துதிக்கன்ற. சேடர் - பெருமையுடையவர். திரு - நல்லூழ். உருவினார்-உயிரற்ற உடம்புகளாய் உள்ளவர். சாடர்- சகடர்; நிலையில்லாதவர். சாண் கை - சாணாகப் பிடித்த கையளவை யுடைய. ‘சாண் மகன்’ என்பது. சிறுமை குறிப்பதோர் இகழுரை. மோடு-முருட்டுத் தன்மை; இஃது, அகரம் பெற்று வந்தது. சழக்கர்-பொய்யர். பிழைத்தல்-வயிறு வளர்த்தல். ‘பிழக்க’ என்பது பாடம் அன்று. பிட்டல்-ஒன்றைச் சிதைத்தல். இதன்பின், ‘மாட்டாத’ என ஒருசொல் வருவிக்க பேடர்-ஆண்மை இல்லாதவர்; மேலான பயனை எய்துதலே ஆண்மை என்க. 41. ‘என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல் நீங்காமைக்கு ஏதுவாகிய திருக்குறிப்பு, என்க. தேறல்-தேன், என்றது பேரின்பத்தை. திருக்குறிப்பு, நடனத்தில் உள்ளது. ‘செல்வம் இல்’ என்பது, ‘செலவில்’ எனக் குறைந்து நின்றது. அருக்கர்- சுருக்கம் உடையவர்; பெருக்கம் இல்லாதவர். அள்ளல்வாய- நரகத்தின்கண் உள்ள. கள்ளர்-வஞ்சகர். அவியா-கெடாத. |