பக்கம் எண் :

30திருவிசைப்பா[ஒன்பதாந்


40.

‘ஆடர வாட ஆடும்
   அம்பலத் தமுதே’ என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
   திருவிலா உருவி னாரைச்
சாடரைச், சாட்கை மோடச்
   சழக்கரைப், பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (6)
 

41.

உருக்கினன் உள்ளத் துள்ளே
   ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
   செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை, அள்ளல் வாய
   கள்ளரை, அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (7)
 

40.     ஆடு அரவு-படம் எடுத்து  ஆடுந்தன்மை  யுடைய பாம்பு.
ஆட-அது,   தன்   மேனியில்   இருந்து  அசைய.  என்னும்- என்று
துதிக்கன்ற.     சேடர் -  பெருமையுடையவர்.     திரு  -  நல்லூழ்.
உருவினார்-உயிரற்ற    உடம்புகளாய்    உள்ளவர்.    சாடர்- சகடர்;
நிலையில்லாதவர். சாண் கை - சாணாகப் பிடித்த கையளவை  யுடைய.
‘சாண்    மகன்’    என்பது.    சிறுமை   குறிப்பதோர்    இகழுரை.
மோடு-முருட்டுத்    தன்மை;   இஃது,   அகரம்   பெற்று    வந்தது.
சழக்கர்-பொய்யர்.  பிழைத்தல்-வயிறு  வளர்த்தல்.  ‘பிழக்க’   என்பது
பாடம்  அன்று.  பிட்டல்-ஒன்றைச் சிதைத்தல். இதன்பின்,  ‘மாட்டாத’
என  ஒருசொல்  வருவிக்க  பேடர்-ஆண்மை  இல்லாதவர்;  மேலான
பயனை எய்துதலே ஆண்மை என்க.

41. ‘என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல்
நீங்காமைக்கு  ஏதுவாகிய  திருக்குறிப்பு, என்க. தேறல்-தேன், என்றது
பேரின்பத்தை.  திருக்குறிப்பு,  நடனத்தில்  உள்ளது.  ‘செல்வம்  இல்’
என்பது,   ‘செலவில்’  எனக்  குறைந்து  நின்றது. அருக்கர்- சுருக்கம்
உடையவர்;   பெருக்கம்   இல்லாதவர். அள்ளல்வாய- நரகத்தின்கண்
உள்ள. கள்ளர்-வஞ்சகர். அவியா-கெடாத.