பக்கம் எண் :

திருமுறை]8. கோயில்57


83.

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
   தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
   நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
   அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (4)
 

84.

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
   களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
   தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
   பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.               (5)
 

85.

நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு
   நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
   விரிசடை யடிகள்தங் கோயில்


83.  துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது  ஒலியைக்
குறித்தன.   வான்   இயம்ப-வானளவும்  சென்று  ஒலிக்க.   முழவம்-
மத்தளம்.  அந்தியின்  மறை - அந்திக் காலத்திற்   சொல்லப்படுகின்ற
மந்திரங்களையுடைய    (நான்கு    வேதங்கள்      என்க).   மறைப்
பொருள்-இரகசியப்  பொருள்கள்.  ‘மறைப்  பொருள்  அரும்பும்’ என
இயையும்.

84.     மொட்டித்து - குவிந்து. களைகணே -பற்றுக்கோடானவனே.
தெளி  தேன்-தேன்  உண்மையைத் தெளிந்த வண்டுகள், ஆட-பறந்து
திரிய.  ‘சோலையது  சூழ் மொழுப்பில்’ என்க. சூழ் மொழுப்பு-பரவிய
மேலிடம்.

85.     அகம், அந்நெஞ்சின் அகம். ‘நிலைமையோடு கூடி’   என
ஒருசொல்   வருவிக்க.   முதற்றொட்டு,   ‘‘எழுந்த’’  என்பது  காறும்
உள்ளவை, வெஞ்சுடருக்கு அடையாய், இல்பொருள்