பக்கம் எண் :

58கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்
   தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (6)
 

86.

பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
   புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
   தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
   நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்           (7)
   திருவளர் திருச்சிற்றம் பலமே.
 

87.

சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
   திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
   புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
 

உவமையாக்கின.     வெஞ்சுடர்-பகலவனது வெப்பமான     கதிர்கள்.
சுடர்வபோன்று-வீசுவனபோன்று.  துளும்பும்-விரிகின்ற.   புரிசை-மதில்.
‘‘புரிசையும்,   அகழியும்   சூழ்ந்த   வட்டத்து   அகம்படி’    என்க.
அகம்படி-உள்ளிடத்தில்.  மணி நிரை பரந்த செஞ்சுடர்- மாணிக்கங்கள்
பரந்து     கிடத்தலால்     உண்டாகின்ற     செம்மையான    ஒளி.
அரும்பும்-தோன்றுகின்ற.

86. ‘தீத்திரளின் உருவம்போல’ என உவம உருபு விரிக்க. புந்தியில்
-  எமது  மனத்தில்,  ‘‘மால்விடையோன்’’  என்றது  ஒரு   பெயராய்,
‘‘வந்த’’  என்றதற்கு  முடிபாயிற்று.  தூத்திரட்  பளிங்கில்  தோன்றிய
தோற்றம்   தூய   பளிங்கின்   திரளினின்றும்   தோன்றிய   காட்சி.
தோன்ற-காணப்படுமாறு.  நா-நாவினால்.  ‘சிவபெருமானது  திருமேனி
பளிங்குபோல்வது,  திருநீற்றினால்’  என்பது  முன்னும்  கூறப்பட்டது.
‘நாஓர்ந்து’ என, ஓர்தல், இங்கு, ‘ஓதி’ என்னும் பொருட்டாய்  நின்றது.

87.   சீர்த்த-சிறப்புப்  பெற்ற.    திண்புவனம்,      மண்ணுலகம்.
‘‘திசை’’ என்றது. பூமியைச் சூழ்ந்து நிற்கின்ற இந்திரன்